கொள்ளிடம் தனியார் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு மஜக ஏற்பாட்டில் ஆக்ஸிஜன்!

ஜூன்.02, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக கொரோனா அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களிடமிருந்து லால்பேட்டை மஜக ஆக்ஸிஜன் சேவை மையத்திற்கு அழைப்பு வந்தது.

அதனடிப்படையில், லால்பேட்டை மஜக கையிருப்பில் இருந்த 200 Kg/Cm2 மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உடனடியாக மஜக ஆம்புலன்ஸில் நேரில் எடுத்து சென்று கொரோனா அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் தேவைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டாரங்களை தாண்டி தனது ஆக்சிஜன் சேவையை லால்பேட்டை மஜக மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.